இலக்கு ஒன்றே உறுதி வீறுநடை போடு என் நண்பனே
மாணவர்கள் சக்திக்கு எத்தனை பெரிய வலு உண்டு என்பதை மாணவர்களே அறிந்து கொண்ட மகத்தான நேரம் இது. மாணவர்களின் போராட்ட களம் வீரியம் பெறுகின்ற முக்கிய காலகட்டத்தில் தமிழனம் அடுத்த கட்ட இலக்குகளை நோக்கி பயணிக்க வேண்டிய கடமை ஒவ்வொருவரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாணவ சமூகம் தன்மானம் உள்ள தமிழனை எதிர்பார்த்து அழைப்பு விடுக்கின்றது. அவர்களோடு தோளோடு தோள் நின்று போராட்ட இலக்கை அடையும் வரை அவர்களின் இலட்சியத்தையும் உறுதியையும் இறுக அணைத்துக்கொள்வோம்.
தொடர் தமிழக மாணவர்கள் எழுச்சி
என்றுமே தமிழகத்திற்கும் ஈழத்திற்குமான உறவு தொப்புள்கொடி உறவாக உயிர்ப்புடன் நிலைத்து நீடிக்கின்றது. தமிழர்கள் அல்லாத சில சுயநல ஆட்சியாளர்களால் நசுக்கப்பட்ட விடுதலை உணர்வு இப்போது (எப்போதும்) தமிழக மக்களின் உள்ளங்களில் பொங்கி வீறுநடை போடுகின்றது. இந்த உணர்வு முத்துக்குமார் மூட்டிய தீயின் தணல். அதன் உண்மை வெப்பம் தமிழர் சமுதாயத்தின் உள்ளங்களை சுட்டெரிக்க தமிழகம் எங்கும் உருவானது விடுதலை தீப்பொறி.
விசம் குடித்த தத்துவ மாமேதை
மனித சமுதாயத்தின் சிந்தனை திறனை நுணுக்கமாக கூர்மைப்படுத்தி, மனிதனை மேம்படுத்தி சிறந்த வாழ்க்கை முறைக்கு வழி காட்டியது தத்துவமே. அந்த தத்துவ வாதங்களை தாங்க முடியாமல் சாக்கிரட்டீஸ் என்கின்ற தத்துவ மேதைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை யாரால் மறக்க முடியும்.
உலகமே இன்றுவரை மறக்காமல் பெருமிதத்துடன் சுட்டிக்காட்டும் மாபெரும் மாமேதை சாக்கிரட்டீஸுக்கு மரண தண்டனை விதித்தது ஒரு ஜனநாயக ஆட்சி என்பது சாமானியர்கள் பலருக்கு தெரியாத உண்மை.
அதிரடி புரட்சி மன்னன் (கி.மு கி.பி)
மதன் அவர்களால் எழுதப்பட்ட கி.மு கி.பி என்ற முகநூலில் சில பக்கங்களில் இருந்து பண்டைய நாகரீக சரித்திரங்களை பற்றிய சில சுவாரசியமான தகவல்களை படித்ததில் இருந்து வாசகர்களுக்கு பகிர வேண்டும் என்ற தூண்டுதலில் புரட்சி மன்னன் ஆமன் கோடப் என்ற எகிப்திய மன்னனை பற்றிய பதிவை இடுகின்றேன்.
என்ன நேர்ந்தாலும் சரி, என் மனதில் உண்மை என்று பட்டதை சொல்லியே தீருவேன் என்று பிடிவாதமாக வாழ்பவர்கள் பல சோதனைகளை சந்திக்க வேண்டியிருக்கின்றது. சூரியன் மையத்தில் இருக்க பூமி அதை சுற்றி வரும் கிரகம் என்றார் கலிலியோ. அப்படி சொல்லி பூமியின் மதிப்பையும், புனிதத்தையும் குறைத்ததற்காக போப் ஆண்டவரின் காலடியில் கலிலியோ மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டி வந்தது.
தமிழில் விண்டோஸ் 7 இயங்கு தளத்தை பயன்படுத்தல்
மைக்ரோசொப்ட் நிறுவனம் விண்டோஸ் 7 ஒபெரடிங் சிஸ்டத்தை உலகம் முழுவதும் உள்ள கணினி பயனர்களை சென்றடைய பலதரப்பட்ட யுக்திகளை கையாள்கின்றது. பல்வேறு பட்ட மக்களை கவர அவர்களின் மொழியிலேயே விண்டோஸ் 7 இயங்கு தளத்தை பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது . அந்த வகையில் தமிழை தங்கள் தாய் மொழியாக கொண்டு உலகத்தின் இண்டு இடுக்கில் பரந்து வாழும் அத்தனை தமிழர்களும் இனி கணினியில் விண்டோஸ் 7 இயங்கு தளத்தை தமிழிலேயே பயன்படுத்தலாம்.
Subscribe to:
Posts
(
Atom
)
No comments :
Post a Comment