e-TamilTech - தமிழ் நம் மூச்சு அதுவே நம் பேச்சு

Universal Information Technology Solutions and Articles in Tamil

முகப்புத்தக பக்கத்தை நிரந்தரமாக அழிப்பது எப்படி?

இன்றைய காலங்களில் பாவித்த முகப்புத்தக பக்கத்தினை நிரந்தரமாக அழிப்பது தொடர்பாக முகப்புத்தக பாவனையாளர்கள் தெரிந்து கொள்வது அவசியம். ஒரு சில பாவனையாளர்கள் தங்களுக்கென ஒன்றிற்கு மேற்பட்ட முகப்புத்தக கணக்குகளை பயன்படுத்துகின்றனர் . இதனால் சில சந்தர்ப்பங்களில் தேவைக்கதிகமான முகப்புத்தக கணக்குகள் வைத்திருப்பதால் இடர்பாடுகளுக்கு ஆளாகின்றனர் . இதன் பொருட்டு குறித்த முகப்புத்தக கணக்கை நிரந்தரமாக அழித்து விட எண்ணுகிறார்கள். இப்பதிவின் ஊடாக எவ்வாறு குறித்த கணக்கை அழிப்பது என்பதை இலகு படிமுறை மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.


  • அழிக்க வேண்டிய குறித்த முகப்புத்தக கணக்கை திறந்து கொள்ளவும்.
  • முகப்புத்தக பக்கத்தின் மேல் மூலையில் உள்ள செட்டிங் மெனுவை அழுத்துங்கள்.



  • பின்னர் தோன்றும் திரையில் கீழே காட்டப்பட்ட "Download a Copy" என்பதை அழுத்தவும்.


  • அதன் பின்  பின்வரும் லிங்கை "https://www.facebook.com/help/delete_account" அழுத்தி கீழே காட்டப்படுள்ள படத்தில் உள்ளவாறு Delete My Account என்பதை கொடுத்து குறித்த முகப்புத்தக கணக்கை அழித்து கொள்ளமுடியும். 


  • எல்லாம் முடிந்தது. நீங்கள் முன்னம் குறித்த முகப்புதகத்தில் பதிவிட்டு இருந்த அனைத்தும் 9௦ நாட்களில் நிரந்தமாக அழிந்துவிடும்.

இரத்தம் பற்றிய அறிய தகவல்கள்!

1. இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?

ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்” என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப் பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில்ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.



பல்லவ நாட்டிய கலைச் செல்வி சிவகாமி - II

பல்லவ நாட்டிய கலைச் செல்வி சிவகாமி - I 

பின்னர் எட்டு மாதங்கள் கழித்து காஞ்சி கோட்டை தளபதியாக பரஞ்சோதி மகேந்திர பல்லவரால் நியமிக்க படுகின்றான். அதோடு நரசிம்ம பல்லவருக்கு துணையாக காஞ்சியில் தங்கியிருக்கு மாறு மகேந்திர பல்லவர் உத்தரவு பிறப்பிக்கின்றார். இதற்கிடையில் புலிக்கேசி குறிப்பிட்ட எட்டு மாத காலங்களும் நாகநந்தி செய்திக்கு துங்கபத்திர நதிக்கரையிலேயே சைனியத்துடன் காத்துக் கொண்டிருந்தான். நாகநந்தியை பின் தொடர்ந்து அவர் என்ன காரியங்களில் ஈடுபடுகின்றார் என்பதை தெரிந்து வர சத்துருக்கன் என்னும் ஒற்றனை மகேந்திர பல்லவர் அனுப்பியிருந்தார்.  நாகநந்தி பரஞ்சோதிக்கு ஓலை கொடுத்து நாகார்ஜுன மலைக்கு அனுப்பிய பிற்ப்பாடு தெற்கே கிளம்பிப் போனான். அங்கே பாண்டிய மன்னன் சடையவர்மனுக்கும், நாகநந்தி பிக்குவிக்கும் பேச்சுவார்த்தை நடந்தது.

பல்லவ நாட்டிய கலைச் செல்வி சிவகாமி - I

பொன்னியின் செல்வன் பெரும் நாவலை படித்து முடித்த ஆர்வத்தோடு கல்கியின் அடுத்த படைப்பான சிவகாமியின் சபதம் நாவலை படித்தேன். மிக அருமையான நாவல். பல்லவ சாம்ராஜ்யத்தின் சரித்திர பக்கங்களை புரட்டிய அனுபவம் கிடைத்தது. சிவகாமியின் சபதத்தாலும், சிவகாமி மீது நாகநந்தியின் கொண்ட காதல் மோகத்தாலும், நரசிம்ம பல்லவரின் அவசர கோபத்தாலும், ஆயனரின் அஜந்தா இரகசிய ஆசையாலும்,புலிக்கேசியின் ராஜ்ய மோகத்தாலும், மகேந்திர சக்கரவர்த்தி மற்றும் தளபதி பரஞ்சோதியின் ராஜ தந்திரங்களாலும் உருவானது சிவகாமியின் சபதம் என்ற காவியம். அதன் விளைவாக இந்த பதிவை இடுகின்றேன்.

இணைய உலாவுதலை (Web Browsing ) வேகப்படுத்த OpenDNS அல்லது Google DNS க்கு மாற்றி அமைத்தல்

உள்ளூர் இணைய சேவைகள் வழங்குனர்களிடம் அனேகமாக அதிவேக DNS (Domain Name System ) Servers இருப்பது இல்லை. இந்நிலைமை நீங்கள் இணைய வலை பக்கங்களை பார்ப்பதற்க்கான இணைய உலாவுதலை (Web Browsing ) வேகத்தை குறைத்து விடுகின்றது.  நீங்கள் உங்களது IPV4 செட்டிங்க்ஸ் யை OpenDNS அல்லது Google DNS  க்கு மாற்றி அமைப்பதின் மூலம் உங்களுடைய இணைய உலாவுதலை (Web Browsing ) வேகப்படுத்த முடியும். இவை சர்வதேச DNS (Domain Name System ) Servers வழங்கும் நிறுவனங்கள்.