e-TamilTech - தமிழ் நம் மூச்சு அதுவே நம் பேச்சு

Universal Information Technology Solutions and Articles in Tamil

பல்லவ நாட்டிய கலைச் செல்வி சிவகாமி - II

No comments
பல்லவ நாட்டிய கலைச் செல்வி சிவகாமி - I 

பின்னர் எட்டு மாதங்கள் கழித்து காஞ்சி கோட்டை தளபதியாக பரஞ்சோதி மகேந்திர பல்லவரால் நியமிக்க படுகின்றான். அதோடு நரசிம்ம பல்லவருக்கு துணையாக காஞ்சியில் தங்கியிருக்கு மாறு மகேந்திர பல்லவர் உத்தரவு பிறப்பிக்கின்றார். இதற்கிடையில் புலிக்கேசி குறிப்பிட்ட எட்டு மாத காலங்களும் நாகநந்தி செய்திக்கு துங்கபத்திர நதிக்கரையிலேயே சைனியத்துடன் காத்துக் கொண்டிருந்தான். நாகநந்தியை பின் தொடர்ந்து அவர் என்ன காரியங்களில் ஈடுபடுகின்றார் என்பதை தெரிந்து வர சத்துருக்கன் என்னும் ஒற்றனை மகேந்திர பல்லவர் அனுப்பியிருந்தார்.  நாகநந்தி பரஞ்சோதிக்கு ஓலை கொடுத்து நாகார்ஜுன மலைக்கு அனுப்பிய பிற்ப்பாடு தெற்கே கிளம்பிப் போனான். அங்கே பாண்டிய மன்னன் சடையவர்மனுக்கும், நாகநந்தி பிக்குவிக்கும் பேச்சுவார்த்தை நடந்தது.

No comments :

Post a Comment

பல்லவ நாட்டிய கலைச் செல்வி சிவகாமி - I

No comments
பொன்னியின் செல்வன் பெரும் நாவலை படித்து முடித்த ஆர்வத்தோடு கல்கியின் அடுத்த படைப்பான சிவகாமியின் சபதம் நாவலை படித்தேன். மிக அருமையான நாவல். பல்லவ சாம்ராஜ்யத்தின் சரித்திர பக்கங்களை புரட்டிய அனுபவம் கிடைத்தது. சிவகாமியின் சபதத்தாலும், சிவகாமி மீது நாகநந்தியின் கொண்ட காதல் மோகத்தாலும், நரசிம்ம பல்லவரின் அவசர கோபத்தாலும், ஆயனரின் அஜந்தா இரகசிய ஆசையாலும்,புலிக்கேசியின் ராஜ்ய மோகத்தாலும், மகேந்திர சக்கரவர்த்தி மற்றும் தளபதி பரஞ்சோதியின் ராஜ தந்திரங்களாலும் உருவானது சிவகாமியின் சபதம் என்ற காவியம். அதன் விளைவாக இந்த பதிவை இடுகின்றேன்.

No comments :

Post a Comment

இணைய உலாவுதலை (Web Browsing ) வேகப்படுத்த OpenDNS அல்லது Google DNS க்கு மாற்றி அமைத்தல்

No comments
உள்ளூர் இணைய சேவைகள் வழங்குனர்களிடம் அனேகமாக அதிவேக DNS (Domain Name System ) Servers இருப்பது இல்லை. இந்நிலைமை நீங்கள் இணைய வலை பக்கங்களை பார்ப்பதற்க்கான இணைய உலாவுதலை (Web Browsing ) வேகத்தை குறைத்து விடுகின்றது.  நீங்கள் உங்களது IPV4 செட்டிங்க்ஸ் யை OpenDNS அல்லது Google DNS  க்கு மாற்றி அமைப்பதின் மூலம் உங்களுடைய இணைய உலாவுதலை (Web Browsing ) வேகப்படுத்த முடியும். இவை சர்வதேச DNS (Domain Name System ) Servers வழங்கும் நிறுவனங்கள்.

No comments :

Post a Comment

சோழர் சரித்திர காவிய நாயகன் பொன்னியின் செல்வன்

2 comments
பல தமிழ் நாவல்களில் சோழர் காலத்து சரித்திரங்களையும் அதனோடு பிண்ணிப்பிணைந்த கதைகளையும் வாசகர்கள் படித்திருப்பார்கள். கல்கி அவர்களால் எழுதப்பட்ட மிகப்பிரபல்யம் ஆன நாவல்களில் முக்கியமான ஒரு நாவல் பொன்னியின் செல்வன். சோழர் மகோன்னத காலத்தில் நடந்த சம்பவங்களை சுவையாக விபரிக்கும் அற்புத காவியம். பலர் இந்த நாவலை படித்தும், கேட்டும், உணர்ந்தும் இருப்பார்கள். நானும் பல காலங்களாய் இந்த அரிய நாவலைப்பற்றிய பலர் கருத்துக்களை மட்டுமே கேட்டு வந்தேன். அதன் தூண்டுதலில் எப்படியாவது பொன்னியின் செல்வன் காவியத்தை படிக்கவேண்டும் என்ற ஆவல் தூண்டி இழுக்க, இணையத்தில் தேடி ஒரு பெரும் காவியத்தை படித்து முடித்தேன். அதன் விளைவாக எனது அனுபவத்தை விபரிக்கவும், இன்னமும் இந்த நாவலை படிக்காமல் இருப்பவர்களுக்கும் பொன்னியின் செல்வன் கதை சுருக்கம் பற்றி கூறவும் என் மனம் பேராவல் கொண்டு இந்த பதிவை இடுகின்றேன்.

2 comments :

Post a Comment